ஆதவனே ! நின்முகம் செங்கமலமாய்
ஆயிரங் கதிர்களுடனே ஒளிவீசிடுமே !
முழுமதியே ! நின்முகம் மங்கலமாய்
மஞ்ச ளழகியாய் பளீச்சிடுமே !
கருமேகமே ! நின்முகம் ஆனந்தமாய்
வான்வெளி யெங்கும் சூழ்ந்திடுமே !
இடியே ! நின்முகம் மத்தளமாய்
எட்டுத்திக்கும் டமாரமாய் முழங்கிடுமே !
மின்னலே ! நின்முகம் ஜோதியாய்
கண்களிடையே மின்னொளியாய் பிரகாசித்திடுமே !
மழையே ! நின்முகம் பகட்டாய்
பார்முழுதும் முத்துச்சாரலாய் பொழிந்திடுமே !
தென்றலே ! நின்முகம் வசந்தமாய்
வனங்கள்தோறும் வானளாவிப் பெருகிடுமே !
மலையே !நின்முகம் பாங்காய்
ஈரேழுலோகங்களையும் மிஞ்சிட உயர்ந்திடுமே !
ஆகாயத்தந்தையவன் மடியில் தவழும்
நிலமகளாம் பூமகளின் புன்னகையினால் .!!!
No comments:
Post a Comment