இனியவனே !
நீலாம்பரி ராகந்தனில்
உன் தேனிசை ஒலித்திடவே
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !
தெவிட்டா தமுதமாய்
உன் செம்மொழி சுவைத்திடவே
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !
பளிச்சிடும் நீரதனில்
உன் கட்டழகு பார்த்திடவே
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். !
வருடிடும் தென்றலதனில்
உன் பொன்மேனி சிலிர்த்திடவே
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !
கெஞ்சிடும் இமைகளதில்
உன் செவ்விதழ் கொஞ்சிடவே
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !
காத்திருந்த காலம் போதுமென்று
வந்தாயே வசந்தமாய் அருகில்இன்று !
எனதுயிர்ப் பைங்கிளியே
இந்த இன்பமென்றும் திளைத்திடவே
எத்துணை துன்பமும்நான் பொறுத்திருப்பேன்
இத்துணை நாளாய்நீ எங்கிருந்தாய் ?
No comments:
Post a Comment