Sunday, September 12, 2010

அழைப்பு!

பாடி மகிழும் பறவைகளை
நாடி வரும் தென்றலே!

ஆடி மகிழும் மயில்களை
தேடிச் செல்லும் மேகமே!

ஓடி மகிழும் ஆற்றினை
சென்று அடையும் மழைகளே!

கூடி மகிழும் பூக்களை
உரசும் வண்ணப் பூச்சிகளே!

தேன் சிந்தும் இதழ்களை
வென்று வரும் கீதங்களே!

என்னவனின் நினைவுகளை
சுமந்து நிற்கும் சேதிதனை

விரைந்து சொல்ல வாருங்களேன்
எனது இனிய மன்னவனுக்கு!!!

No comments:

Post a Comment