Sunday, March 27, 2011

அன்பே....!

அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே...
உன் புன்னகையை ரசித்தேன்
உலகம் சொர்க்கமாக மாறியது...!

Thursday, March 3, 2011

தேடினேன்...தேடினேன்..தேடினேன்

என் ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...

என் அன்புக்குரியோனைத் தேடினேன்....

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்

என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...

என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..

என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..

என் பண்புக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...

என் உயிருக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...

என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...

என் காதலுக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...

என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..

என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்

என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி

என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....