என் ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே?
ஆலயம் முழுவதும் தேடினேன்...
என் அன்புக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
செல்லும் வழியெல்லாம் தேடினேன்...
என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..
என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..
என் பண்புக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...
என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...
என் காதலுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..
என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?
எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்
என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி
என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....