Sunday, March 27, 2011

அன்பே....!

அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே...
உன் புன்னகையை ரசித்தேன்
உலகம் சொர்க்கமாக மாறியது...!

No comments:

Post a Comment