Tuesday, November 17, 2009

இல்லை!இல்லை!

கண்ணே!
என் இதயத்தில்
இருப்பது
இரத்த நாளங்களா?
இல்லை!இல்லை!
உன் கொஞ்சும் விழிகளின்
வார்த்தை ஜாலங்கள்!!

மறந்ததேனோ!

தென்றலின் வருடலைக்
கண்ட பறவைகள்
தங்களின்
இனிய கானத்தினை
மறந்துவிட்டனவோ!