Sunday, July 10, 2011

காதல்!

காதல்!

என் செல்லமே! எம் தலைவனே!

உம் காந்த விழிகள் காண நாணி
எம் கயல் விழிகள் புவி பார்க்கிறதே!

உம் கொஞ்சு மொழிகள் கேட்டு மயங்கி
எம் செவி இரண்டில் தேன் பாய்கிறதே!

உம் மென் கரங்கள் பட்டு வெட்கி
எம் பொன் மேனியில் மின்னல் பாய்கிறதே!

உம் மயிர் செறிந்த கால்கள் பின்னி
எம் பாத கமலங்கள் வெண் பஞ்சாகிறதே!

உம் இதழோடு இதழ் சேர்ந்து உரையாடி
எம் இதழ்கள் நும் கவி பாடுகிறதே!

உம் மனத்தோடு மனம் ஒன்றி கலந்த
எம் இதய நாளங்கள் களி நடனமாடுகிறதே!

எம் கரங்கள் உனை மூடிய இரவில்
நும் கரங்கள் மீட்டிய சுகமதில் மயங்கி

சூரியக் கதிர்கள் கண்டும் நான் எனை
இழந்து இதழ் விரிக்க மறந்த வேளைதனில்

பொன்வண்டே! என்கண்ணே! உன் ரீங்கார இசையில்
விரிந்த தாமரைப்பூவாம் எமை நீ அணைக்க

அடுத்த நாள் இரவுப் பொழுதிற்காகக் காத்திருக்கும்
உமது விழிகளில் தோன்றிய அற்புதமல்லவோ காதல்!