எனதுயிரே இன்பத்
தேன் மலரே !
வடிவழகே வண்ணக்
கவித் தமிழே !
குளிர்வீசும் பெருங்
கடல் அலையே !
ஒளிவீசும் அருஞ்
சுடர் ஒளியே !
அரும்புமீசை உன்
எழில் சொல்லுதே !
அழகுமுகம் உந்தன்
கதை சொல்லுதே !
உன்மொழியால் தினம்
அமுதூட்ட வா !
உன்னிசையால் எனைக்
களிப்பூட்ட வா !
விரல்பூக்களால் எந்தன்
உடல்மீட்ட வா !
விழிப்பாக்களால் இன்பக்
கவிபாடி வா !
கண்ணிமைமூடினால் உந்தன்
நினைவெங்கும் மலர்கிறதே !
விழியோரம் துளிநீர்
கொஞ்சம் வழிந்தோடுதே !!!
No comments:
Post a Comment