அந்தி மாலைப் பொழுதினிலே
மாரி பொழியும் வேளைதனிலே
மணக்கும் ஈரமண்ணின் வாசனையிலே
உள்ளம் உவகையால் மகிழ்ந்திடுமே !
குயிலின் இராக இசையினிலே
மயிலின் நடன அழகினிலே
தவளை ஒலிக்கும் சத்தத்தினிலே
காதல் கனிவாய் கசிந்திடுமே !
கொட்டும் மழையும் சிந்தியதே
பேதை உடலும் நடுங்கியதே
விட்டுப் பிரிந்த நாயகனுமே
விரைந்து வந்து அணைத்தானே !
No comments:
Post a Comment