Sunday, September 12, 2010

கொட்டும் மழைதனிலே...!

அந்தி மாலைப் பொழுதினிலே

மாரி பொழியும் வேளைதனிலே

மணக்கும் ஈரமண்ணின் வாசனையிலே

உள்ளம் உவகையால் மகிழ்ந்திடுமே !

குயிலின் இராக இசையினிலே

மயிலின் நடன அழகினிலே

தவளை ஒலிக்கும் சத்தத்தினிலே

காதல் கனிவாய் கசிந்திடுமே !

கொட்டும் மழையும் சிந்தியதே

பேதை உடலும் நடுங்கியதே

விட்டுப் பிரிந்த நாயகனுமே

விரைந்து வந்து அணைத்தானே !

No comments:

Post a Comment