குஜராத்திலே உதித்த முத்தல்லவோ
போர்ப்பந்தரிலே தோன்றிய பொன்னல்லவோ
இந்தியாவுக்கே வந்த இமயமன்றோ
அகிம்சையே அவன் வழியன்றோ ! [குஜராத்திலே]
கருணைமழை பொழிந்த வான்முகிலே
சாந்தஉள்ளம் கொண்ட சாத்வீகமே
மாந்தருக்குள் தோன்றிய மாமணியே
மாநிலத்தின் மொத்த அற்புதமே…! [குஜராத்திலே]
நல்வினை பொருந்திய நாயகமே
நடுநிலை பொதிந்தத் தாயகமே
கல்விச்செல்வம் தந்த நல்லறிவே
கவிதையே உந்தன் கற்பகத்தருவே….! [குஜராத்திலே]
சோம்பலை விடுத்தச் சித்திரமே
சத்தியத்தைக் கையாண்ட சாத்திரமே
செல்வமெல்லாம் சேர்ந்தப் பொக்கிஷமே
சொன்னசொல்லைக் காத்தக் காந்தியமே…! [குஜராத்திலே]
ஏழைகளின் துயர்துடைத்த எளியவனே
ஊழியருக்கு ஊழியனான உன்னதமே
கலையுள்ளம் கொண்டக் காவியமே
கொலைசெயல் மறுத்த மாதவமே…! [குஜராத்திலே]
தக்கசமயம் தந்துதவிய தைரியமே
மரணபயம் போக்கிய மந்திரமே
புண்படுத்தாத உள்ளம் கொண்டவனே
புண்ணியமே செய்த நல்லுணர்வே…….! [குஜராத்திலே]
தலைசிறந்த தலைவனானத் தங்கமே
உலகமெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்த உத்தமனே
பாரதம் பெற்றக் கலைமகனே
மகாத்மாவே எங்கள் தேசத்தந்தையே….! [குஜராத்திலே]
No comments:
Post a Comment