Saturday, November 27, 2010

ஏங்க வைத்த பொற்காலம்!

ஏங்க வைத்த பொற்காலம்!

காதல் தேவதையின்

விரும்பும் சாந்த குணத்தினிலே

கவரும் காந்தப் பார்வையினிலே

ரசிக்கும் இளமை மேனியினிலே

ருசிக்கும் இனிமைப் பேச்சினிலே

அணைக்கும் இன்பக் கரத்தினிலே

ஊடும் செல்லக் கோபத்தினிலே

கொடுக்கும் அன்பு முத்தத்தினிலே

செய்யும் சரச லீலைகளினிலே

மூழ்கிடும் காம வெள்ளத்தினிலே

துளிர்க்கும் அன்பு மொட்டினிலே

தந்திடும் பேரின்ப சுகத்தினிலே

தன்னையும் மறந்திட்ட காதலினிலே

பிண்ணியும் பிணைந்திட்ட வேளைதனிலே

நினைவும் வந்திட்டப் பொழுதினிலே

இத்துணையும் கற்பனையென அறிந்ததினிலே

எத்துணை ஏக்கமெந்தன் இதயத்தினிலே….!

No comments:

Post a Comment