நமது தேசம்!
ஆரியர்கள் நாடி வந்த
வளமையான தேசமது நமதுதேசமே!
அலெக்ஸாண்டர் தேடி வந்த
வீரமிகுந்த தேசமது நமதுதேசமே!
சிந்துவெளி நாகரீகம் தந்த
நாகரீக தேசமது நமதுதேசமே!
புத்தர்பிறந்து ஞானம் பெற்ற
அறிவு தேசமது நமதுதேசமே!
போரைவெறுத்து அசோகர் கண்ட
அமைதி தேசமது நமதுதேசமே!
நான்குவேதம், கீதை சொன்ன
நீதி தேசமது நமதுதேசமே!
இராமயணத்துடன் பாரதமும் தந்த
இதிகாச தேசமது நமதுதேசமே!
ஆரியபட்டர் ,பாஸ்கரா கண்ட
கல்வி தேசமது நமதுதேசமே!
அந்நியரின் இருநூறாண்டு ஆட்சியிலே
கலையிழந்த தேசமது நமதுதேசமே!
ஆங்கிலேயரையெதிர்த்து வெற்றி கண்ட
விடுதலை தேசமது நமதுதேசமே!
முழுமையான அங்கீகாரம் பெற்ற
குடியரசு தேசமது நமதுதேசமே!
ஆதலினால் அறிவியலில் முன்னேற்றம் கண்ட
விஞ்ஞான தேசமது நமதுதேசமே!
மாதம் மும்மாரி காண்கின்ற
மழை தேசமது நமதுதேசமே!
வயல்வெளியும் ஆறுகளும் பெற்ற
வளமையான தேசமது நமதுதேசமே!
இருந்தபோதிலும் வேளாண்புரட்சி வளர்ச்சியிலே
வளம்குறைந்த தேசமதுவும் நமதுதேசமே!
நன்னீரை நச்சாக்கிக் கண்ணீரை
மிச்சமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
ஆலைக்கழிவை ஆற்றில் கலந்து
அசுத்தமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
இக்குடியரசு நன்னாளில்
மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!!!
இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!
Wednesday, January 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment