Wednesday, January 26, 2011

தாயே...!

பத்துப்
பாத்திரம்
தேய்த்து
மழலை
என்னை
படிக்க
வைத்து
பந்தம்
மெச்ச
மணமுடித்து
பார்போற்ற
வாழவைக்க
இராப்பகலாய்
விழித்திருந்து
உழைத்துக்
களைத்துச்
சோர்வடைந்து
உள்ளம்
முழுதும்
உயர்வு
கொண்டு
நீ
படும்
துயர்
கண்டு
பரந்து
விரிந்த
இப்பிரபஞ்சத்தில்
வஞ்சனையால்
நிந்திக்கப்பட்ட
ஓர்
அபலைக்கு
மகளாய்
பிறந்த
அவலத்தை
நினைத்து
இரணமாகப்
பெருத்து
பாரமாகக்
கனத்த
என் இருதயம்
நந்தவனப்
பூஞ்சோலையாக
மாறிப்
பூக்களாக
மலர்கிறதே
கள்ளிப்
பாலூட்டிக்
கொல்லாமல்
தன்னம்பிக்கைப்
பாலூட்டி
வளர்த்தத்
தாயே
உந்தன்
கருணை
கண்டு........!!!

[இக்குடியரசு நன்னாளில் தன்னம்பிக்கை வளர்க்கக் கோரும்.........

No comments:

Post a Comment