இனிய பாடல்களைப்
பாடிச் செல்லும்
பறவைகளின் ஒலிகளுக்கிடையே!
சுகமான தென்றலை
வீசிச் செல்லும்
காற்றின் அசைவுகளுக்கிடையே!
கரிய நிறத்தினை
விட்டுச் செல்லும்
மேகங்களின் அரவணைப்புகளுக்கிடையே!
சுகந்த மணத்தைப்
பரப்பிச் செல்லும்
பூஞ்சோலைகளின் புன்முறுவல்களுக்கிடையே!
உன்னதமான அமைதியை
நாடிச் செல்லும்
அலைகளின் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே!
ஆனந்தமான இசையை
ஊடுருவிச் செல்லும்
மழையின் நீர்த்துளிகளுக்கிடையே!
ஒற்றை ரோஜாவாய்
வர்ண ஜாலங்களுடன்
விண்ணின் உயரத்தை
அளந்துசெல்ல வந்திருக்கும்
எனதருமை வானவில்லே வருகவே..!
No comments:
Post a Comment