தோழனின்
அன்புக்கரங்கள்
மீட்டிய
வீணையில்
மரபுப்பாக்கள்
இயல்புடன்
உதிர்ந்த
பொழுதினில்
பாசமலர்கள்
சரத்துடன்
பூத்த
நேரத்தினில்
இதயஅறைகள்
துடிப்புடன்
இசைத்த
அசைவினில்
ஒருதுளி
நட்புக்கென
ஒதுக்கி
மகிழ்ந்ததில்
மாணிக்கப்பரல்களுக்கு
ஓர் மகுடமாய்
ஜொலிக்கும்
உன்மனதில்
இந்த ஏழைக்கோர்
சிறுஇடம்
ஓரமாய்
ஒன்று
கிடைத்ததில்
படைத்த
கடவுளுக்கோர்
ஆயிரங்கோடி
நன்றிகளே...!
Sunday, December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment