இகபரசுகம் தாங்கி
வல்லமை மிகுதியுடன்
அபயமளிக்கும் ஆதிலட்சுமியவள்
அபயமென்று வருவோர்க்கு
அபயமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
ஜடா மகுடத்துடன்
சுகுமாறனை ஏந்தி
பூரண கும்பத்துடன்
சௌபாக்கியமளிக்கும் சந்தானலட்சுமியவள்
சகலசௌகர்யமும்வேண்டி வருவோர்க்கு
சௌபாக்கியமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
கரங்கள் நான்கினில்
ஞானமுத்திரை தாங்கி
வெண்பட்டுப் புடைவையுடன்
அரசபோகமளிக்கும் கஜலக்ஷ்மியவள்
அரசபோகம்நாடி வருவோர்க்கு
யோகம்பலவுமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
எண் கரங்களில்
சங்குசக்கரம் தாங்கி
தங்க மணிமகுடத்துடன்
வேண்டும்வரமளிக்கும் தனலக்ஷ்மியவள்
பொருள்வேண்டி வருவோர்க்கு
வேண்டும்வரமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
எண் கரங்களில்
சூலம்கபாலம் ஏந்தி
எட்டுக்கைகளிலும் வெற்றியுடன்
நிர்க்கதியைப்போக்கும் வீரலக்ஷ்மியவள்
நற்கதிவேண்டி வருவோர்க்கு
வேண்டும்நலங்களளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..
இடக் கரத்தினில்
செழுங்கரும்பை ஏந்தி
ஆற்றோர எழிலழகுடன்
நிலவளமளிக்கும் தான்யலக்ஷ்மியவள்
நிலவளம்வேண்டி வருவோர்க்கு
வேண்டும்வளமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
அழகிய முகந்தன்னில்
தாய்ப்பாசந்தனை ஏந்தி
இராஜலங்கார வடிவுடன்
துயரம்போக்கும் விஜயலக்ஷ்மியவள்
இன்பம்வேண்டி வருவோர்க்கு
வேண்டுமின்பமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
நான்கு கரங்களில்
அழகியமலர் தாங்கி
கண்கவர் பொன்மேனியுடன்
வறுமைபோக்கும் மகாலக்ஷ்மியவள்
அறம்பொருள்வீடுபேறுவேண்டி வருவோர்க்கு
வேண்டும்வீடுபேறளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
!
மூவுலகைல் இருப்போர்க்கும்
சந்ததியுடன் தனம்கொடுத்து
கலைகளில்வெற்றி தந்து
சகலசௌபாக்கியமும் வீரத்துடனருளி
அக்ஷ்டலக்ஷ்மியாம் உன்னாமம்சொல்வோர்க்கு
மோட்சத்துடன் முக்தியளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே...நீ புதுவரவே...!
No comments:
Post a Comment